பரமக்குடி: வழக்குரைஞா்கள் சங்க நூலகம் திறப்பு விழா

80பார்த்தது
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்க நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. 

இந்த விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி. சரவணன் தலைமை வகித்து நூலகத்தை திறந்து வைத்தார். நூலகக் கல்வெட்டை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பி. சதீஷ் பராசரன் திறந்து வைத்தார். உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் இந்திய அரசின் பல்வேறு வழக்குகளை நடத்தி வெற்றி பெற்று தந்த அரசு வழக்குரைஞர் பராசரன் உருவப் படத்தை திறந்து வைத்தார். நூலகத்தின் அவசியம், பயன்பாடுகள், இணையத்தள மென்பொருள் பயன்கள் குறித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மெகபூப் அலிகான் பேசினார். 

முன்னதாக வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆர். பூமிநாதன் வரவேற்றார். மூத்த வழக்குரைஞர்கள் முத்துக்கண்ணன், இளமுருகன், பி. என். செந்தில்குமார், சௌமியநாராயணன், சரவணபாண்டியன், கமால், தினகரன், சி. பசுமலை, வடிவேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிபதிகளுக்கு சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசுகளை வழங்கியும் கௌரவித்தனர். பின்னர், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வழக்குரைஞர் சங்கச் செயலர் என். யுவராஜ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி