ராமேஸ்வரத்தில் திமுக அரசு ஏழை எளியோர் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட முதல்வர் மருந்தகம், ஊழியர்கள் இல்லாததால் எப்போதும் மூடப்பட்டே கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.