ராமநாதபுரம் அருகே, ஊரணிக்கோட்டை கிராமத்தில், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஓட்டிச் சென்ற வைக்கோல் ஏற்றிய லாரி, சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்தது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் தீயை அணைத்தனர். லாரி முற்றிலும் சேதமடைந்தது. திருவாடானை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.