பரமக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை, போலீசார் விசாரணை

1பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவர், இரவுப் பணியை முடித்துவிட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, மூன்று பேர் அவரைத் தகராறு செய்து கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பரமக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.