தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்தபோது, சொகுசு காரில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். காரின் உள்ளேயும், வெளியேயும், மேற்கூரையில் அமர்ந்தும் சிலர் விசில் ஊதி ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது, அப்பகுதி வழியாக சென்ற அரசு ஊழியர்களையும் பெண்களையும் அச்சுறுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ரோந்து போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து, த.வெ.க.வினர் சிலரை கைது செய்துள்ளனர்.