இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கடற்கரை அருகே வீட்டை விட்டு வெளியேறிய ராஜாங்கம் என்ற முதியவர், இரண்டு நாட்களாக உறவினர்களால் தேடப்பட்டு வந்தார். நேற்று அவர் கடற்கரை அருகே இறந்து கிடந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.