அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் ECR நான்குவழிச்சாலை பிரிவில் ஜன. 04 அன்று காலை 6 மணிக்கு 13 வயதிற்குட்பட்ட மாணவருக்கு 15 கிமீ, மாணவிக்கு 10 கிமீ, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவருக்கு 20 கிமீ, மாணவிக்கு 15 கிமீ மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள் போனாஃபைட் ஆதார், வங்கிப் புத்தக நகல், மிதிவண்டி கொண்டுவர வேண்டும்.