ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள யமஹா ஷோரூம் முன் நிறுத்தப்பட்டிருந்த பல்சர் பைக் திருடு போனது. முகத்தில் துணியால் மறைத்த நபர் ஒருவர் முதலில் நோட்டமிட்டு, பின்னர் இரண்டு பேர் பைக்கில் வந்து திருடிச் சென்றனர். போக்குவரத்து அதிகமாக இருந்த நேரத்தில் இந்த திருட்டு நடந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.