ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பாம்பன் வடகடல் பகுதியில் திடீரென கடல் நீரை உறிஞ்சும் மேகக் கூட்டங்கள் தோன்றிய அரிய நிகழ்வைக் கண்டு அப்பகுதி மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். வானிலை ஆராய்ச்சி மையம் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.