இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வனத்துறை சார்பில் ஒத்திசைக்கப்பட்ட நிலப்பறவைகள் கணக்கெடுப்பு வன உயிரினக் கோட்ட வன உயிரினக் காப்பாளர் திரு. அகில் தம்பி, இ. வ. ப. தலைமையில் நடைபெற்றது. சக்கரக்கோட்டை, தேர்த்தங்கால், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேல-கீழ செல்வனூர் ஆகிய 5 சரணாலயங்கள் மற்றும் இராமநாதபுரம், மண்டபம், கீழக்கரை வன உயிரினச்சரங்கள் உட்பட 17 இடங்களில் வனச்சரக அலுவலர்கள் குழுவினர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.