பாம்பன் சாலை பாலத்தின் நடுவில் இரும்பு பிளேட் பெயர்ந்து, போல்ட், ஸ்க்ரூ, நட்டுகள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதால் வாகனங்களின் டயர்கள் பழுதாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக சரிசெய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.