ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதன்முறையாக இன்று நடைபெற்றது. கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமை வகித்தார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மண்டபம், ஆர்.எஸ். மங்கலம், திருப்புல்லாணி ஆகிய வட்டார விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் அம்பேத்குமார், குயவன்குடி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி வள்ளல் கண்ணன் பதிலளித்தனர்.