ராமேஸ்வரம்: ரயில் மறியல் போராட்டம்; மீனவர்கள் அறிவிப்பு

175பார்த்தது
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.