இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் இராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக ஆட்சியமைத்த முதல்வர்
விஜய் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.