ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.