கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று, சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக செல்லும் ஐயப்ப பக்தர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் அதிகாலையில் ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, கோயில் தலைமை குருசாமி மோகன் சாமியின் கைகளால் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்கினார்கள். குருசாமி தலைமையில் சபரிமலை பெருவழி பாதையில் சென்று ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளனர்.