ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர். எஸ். மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆர். எஸ். மங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், அவர்களின் அலட்சியப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தார். தொடர்ந்து மருத்துவமனையையும் ஆய்வு செய்தார்.