பாம்பன் தென்கடல் பகுதியில் நாளை (11.01.2026) மணிக்கு 45 முதல் 65 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பாம்பன் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படாது. நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்கு தளத்தில் உள்ள விசைப்படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.