ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அரிய வகை காட்டெருமை ஒன்று சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த காட்டெருமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும் முட்டிச் சேதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்டெருமையைப் பிடித்து காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.