ராமநாதபுரம் அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கூலித் தொழிலாளி குமார் (45) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி கவிதா, குற்றவாளி குமாருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் டிசம்பர் 16, 2023 அன்று நடந்தது.