ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே 16 வயது சிறுமி 2020 செப்.,21ல் காணாமல் போனார். அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அசோக்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சிறுமியை கடத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை, ரூ.2000 அபராதம் மற்றும் போக்சோ சட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்காக 20 ஆண்டுகள் சிறை, ரூ.3000 அபராதம் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.