ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, கணவர் ராஜாமணி இறந்த துயரம் தாங்காமல் மனைவி ஜானகி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அவரது இளைய மகன் தினேஷ் (24) தாய் தந்தையை இழந்த துயரம் தாங்காமல் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டது. ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.