ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் என்ற வாலிபர், கடந்த ஜனவரி 28ம் தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றபோது, காவனூர் அருகே சாலையில் குறுக்கிட்ட நாய் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.