இராமேஸ்வரத்தில் அருளகம் பவுண்டேசன் மற்றும் தீவு மணல்மேடுகள் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இன்று ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.