இராமேஸ்வரம் வட்டாரம் சங்குமால் ஓலைக்குடா கடற்கரை பகுதியில் உள்ள ஸ்ரீ ஆதி கையாலர் நடராஜர் கோவிலில், விநாயகப் பெருமானுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சஷ்டி பூஜை உச்சிகால நேரத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முருகர் மற்றும் மூலவர் நடராஜருக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.