ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்கள் 9 பேர் ஜூலை 29 அன்று இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் படகுகளுடன் பிடிக்கப்பட்ட இவர்களுக்கு, இலங்கை நீதிமன்றம் தலா ரூ.3.5 கோடி அபராதம் விதித்துள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாத சிறை தண்டனை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.