ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான கடல் சீற்றம் நிலவுகிறது. பலத்த காற்றுடன் எழும் ராட்சத அலைகள் சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மீது மோதி வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் யாரும் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலர் ஆபத்தான இந்த அலைகளை வீடியோ எடுத்து வருகின்றனர்.