இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தர்கள், ₹3000 தரிசனக் கட்டணம் செலுத்தியும் சிறப்பு பூஜை செய்ய கோவில் பணியாளர்கள் மற்றும் புரோகிதர்கள் மறுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டதாகக் கூறிய பக்தர்கள், கோவில் நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.