ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை கடலில், புயல் எச்சரிக்கை காரணமாக கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை ஆழமான பகுதிக்குத் தள்ளி நிறுத்தச் சென்றதில் 17 வயது சிறுவன் தொண்டீஸ் கடலில் மாயமானார். ஆகாஷ் (20) மற்றும் பரந்தாமன் (30) ஆகிய இரு மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர். ஆனால், தொண்டீஸ் காணாமல் போன நிலையில், அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.