ரஞ்சி டிராபி: சண்டிகரை சாய்த்த தமிழக கிரிக்கெட் அணி

51பார்த்தது
ரஞ்சி டிராபி: சண்டிகரை சாய்த்த தமிழக கிரிக்கெட் அணி
சேலம் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி குரூப் டி போட்டியில் தமிழ்நாடு, சண்டிகர் அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 301 ரன்களும், சண்டிகர் அணி 204 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் தமிழக அணி 305 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 403 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சண்டிகர் அணி 193 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
Job Suitcase

Jobs near you