மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் வதோதராவில் இன்று (பிப்., 5) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை குவித்தது. தொடர்ந்து 204 ரன்கள் இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடுகிறது.