சேலம் மாவட்டம் வெள்ளியம்பட்டியில் செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் செய்தி நிறுவன பத்திரிகையாளரை ரௌடி கும்பல் ஒன்று தாக்கியுள்ளனர். மேலும், "இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். அரசியல் தொடர்புகளும் இருக்கிறது" என மிரட்டியுள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.