திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்நகரில் அதிமுக பிரமுகர் எம்.சி ரவி இல்லத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 106 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரவியின் வீட்டில் அவரது அண்ணன் மகன் ரமேஷ், ஜவ்வாது மலையில் இருந்து கொண்டுவந்த செம்மரக்கட்டைகளை பதுக்கியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ரமேஷ் மீது ஏற்கனவே ஆந்திராவில் செம்மரக்கட்டை வழக்கு இருப்பது தெரிந்த நிலையில் போலீஸ் அவரை தேடி வருகின்றனர்.