ஏ.ஐ., டீப்பேக் மூலம் உருவாகும் ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய ஐடி விதிகளை அறிவித்துள்ளது. அதிகாரிகள் அல்லது நீதிமன்றம் குறிக்கும் உள்ளடக்கங்களை சமூக வலைத்தளங்கள் 3 மணி நேரத்தில் அகற்ற வேண்டும். மேலும், தனிநபர் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுதல், போலி ஆவணங்கள் அல்லது எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் பரப்புதல் குற்றமாகும்; சிறைத் தண்டனைக்கும் உள்ளாகலாம் என ஐடி அமைச்சகம் எச்சரித்துள்ளது.