திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிதன்யா (27) என்ற இளம்பெண், வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (ஆக.21) அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.