உங்களுடன்
ஸ்டாலின் முகாம் மூலம் கடந்த ஜூலை 15 முதல் தற்போது வரை சுமார் 5.88 லட்சம் பேர், மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்கள் யார்? என்பது குறித்த தகவல் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் தெரிந்துவிடும். இதில், உங்களது மனு நிராகரிப்பட்டால், என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்து, அதே முகாமில் மேல்முறையீடு செய்துகொள்ளலாம். அனைவருக்கும் மகளிர் தொகை கிடைக்கும் வண்ணம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.