தமிழ்நாட்டில் உள்ள 3,734 அரசுப்பள்ளிகளை நவீன மயமாக்க ரூ.2,132 ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், காமராஜர் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். 10,000 பள்ளிகளில் ரூ139 கோடி மதிப்பீட்டில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் வகுக்கப்படும் என அறிவித்தார்.