மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாதங்கள் ஆகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் நிர்வாக மறுசீரமைப்புப் பணிகள் பரிசீலனையில் உள்ளதால், அதுவரை தற்காலிக ஏற்பாடாகப் பழைய முறைப்படி ரூ.1,000 வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், இத்திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.