வறுமையில் வாடும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற நிலையில், விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500-ஆக உயர்த்த தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.