திருப்பூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டதாக, மளிகைக் கடைகாரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ரூ.500 நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வட்டிக்கு விட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் பணம் பெற்றவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.