தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறை வளாகத்தில், கைதிகளின் வாழ்க்கை மற்றும் சிறைத்துறையின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் வகையில் ஒரு புதிய சிறை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் ஒரு நாள் கைதியாக வாழ்ந்து சிறை உணவையும் சூழலையும் அனுபவிக்கும் ‘Feel the Jail’ என்ற தனித்துவமான திட்டமும் தொடர உள்ளது. இதற்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.