பள்ளிப்படிப்பை முடித்து அரசு கல்லூரிகளில் இணையும் ஒவ்வொரு அரசுப்பள்ளி மாணவருக்கும் கல்லூரி சேர்க்கை செலவுகளால் ஏற்படும் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் ரூ.8,000 கல்வி வாழ்வு நிதி வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதன்படி, தவெக அரசு ஆட்சியமைத்துள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடத்தி திட்டம் தொடர்பாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.