கோயில் தங்கத்தை மத்திய அரசு பெற்றுக்கொண்டு தங்க பத்திரம் வெளியிட உள்ளதாகவும், கோயில்களின் கதவு மற்றும் கோபுரங்களில் உள்ள தங்கம் அரசின் தங்க கையிருப்பு என வெளியான தகவல்களுக்கும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சகம், சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல்கள் முற்றிலும் வதந்தியானவை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.