சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்வராயன் மலைத் தொடர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆணைவாரி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், சூழல் சுற்றுலா மையத்திற்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.