சேலம் மாவட்டம் ஆத்தூரில், ஒன்றிய அரசு உயர் அரசு பதவிகளில் உயர் ஜாதியினரை மட்டுமே நியமித்து வருவதாகக் கூறி, திமுக கூட்டணி கட்சியினர் பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போக்கை கைவிட்டு, அனைத்து ஜாதி சமூகத்தினரையும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பதவிகளில் நியமிக்க வேண்டும் என கோஷமிட்டனர். திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.