சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோட்டை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த புளிய மரத்தில் திடீரென புகைமூட்டம் காணப்பட்டது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மரத்தில் தீப்பற்றியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.