நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்

1பார்த்தது
நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்
சேலம் மாவட்டம் அரசிராமணி செட்டிபட்டி மாரியம்மன் கோவில் முன்பு தேவூர் வருவாய் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், எடப்பாடி-குமாரபாளையம் சாலையில் செட்டிப்பட்டி பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்று, வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி