இபிஎஸ் தான் பொதுச்செயலாளர் - எஸ்.பி. வேலுமணி

2012பார்த்தது
இபிஎஸ் தான் பொதுச்செயலாளர் - எஸ்.பி. வேலுமணி
அதிமுகவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி. வேலுமணி சென்னை எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "தவெகவுக்கு ஆதரவு மட்டுமே அளித்தோம், அமைச்சர் பதவி வேண்டும் என நாங்கள் எப்போது கேட்டோம்? ஏமாற்றம் என கூறுகிறார்கள். பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. எங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுக எதிர்ப்பு என்பதற்காகவே அவர்களுக்கு ஆதரவு கொடுத்தோம்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி