சேலம் மாவட்டம் தேவூர் அருகே குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தங்கவேல் (68), தனது மகன் விஜயகுமார் (38) அடிக்கடி பென்ஷன் பணம் கேட்டு தகராறு செய்ததால், கடந்த 22-ஆம் தேதி கீழே தள்ளி கட்டையால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த தங்கவேல், எடப்பாடி அரசு மருத்துவமனையிலும் பின்னர் சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தங்கவேல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.