சேலத்தில் ரயில் மோதி வாலிபர் உடல் சிதறி பலி

734பார்த்தது
சேலத்தில் ரயில் மோதி வாலிபர் உடல் சிதறி பலி
சேலம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தேவாங்கபுரம் புதுத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இன்று காலை குடும்பத்தினர் தேடியபோது, அரசு மருத்துவமனை எதிரே சேலம்-விருத்தாச்சலம் செல்லும் தண்டவாளப்பகுதியில் உடல் சிதறிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். ரயில் மோதி அவர் பலியானதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி